என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 19 June 2012

மேய்ப்பன்..

மிக குளிர்ந்த ,,

இருளில்,,

தூக்கமின்றி புரண்டபோது,,

ஏனோ பட்டியில் ,,.

அடைக்கப்பட்ட ஆடுகளின்,

கதறல் உறுத்தியது..

***
வெளியில் வந்து பார்த்தபோது,,

அமைதியாக இருந்தன ஆடுகள்..

வீட்டினுள் மீண்டும் நுழைந்து,,

போர்வைகள் நிறைய சேர்த்து,,

முடிச்சு போட்டு,,

நீண்டதொரு போர்வையை,,

தயார் செய்து..

பட்டி முழுதும்,,

மேலே கூடாரம் போல்,,

கட்டி விட்டேன்..

**
இப்போது,,

குளிரிலிருந்து ஆடுகள்,

தப்பித்து கொள்ளும்,,

என்று மனம் ,,

மகிழ்வு கொண்டது..

**

இன்னும் ஒரு வாரத்தில்,,

எங்கோ சென்று,

மனிதனின் ருசிக்காக,,

தன் உயிரை இழக்கும்,,

இவைகள்,

வாழும் ஓவ்வொரு,,

வினாடியும் மகிழ்வோடு ,,

இருக்கவேண்டுமே என்ற,,

கவலை எனக்குள்..

***
நான்...

மேய்ப்பன்..

No comments: