என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 10 January 2012

ஒரு பரபரப்பான மாலை நேர,,

கடைதெருவில்....

வாங்கிய பொருட்களை,
... ...
சுமக்க முடியாமல்,,

நடை தள்ளாடி சுமந்து வந்தபோது...

ஏனோ அளவுக்கதிகமாக வியர்த்து கொட்டியது,..

தள்ளாத வயது வேறு ,, பாடாய் படுத்துகிறது,,,

கூட்ட நெரிசலில்...

மெல்ல கலந்து ,,, சிரமத்துடன்,,

நடந்த போது,,,

விநாடி நேரத்திற்கு குறைவான நேரத்தில்,,

ஒரு திடுக்கிடலோடு ஒரு வசந்தம்,,

ஆம்,,

என்னை கடந்து சென்ற அவள்...

என்னவளேதான்,,

வயதின் சுருக்கங்கள் இருப்பினும்,,

என்னவளை கண்டுகொண்டேன்,,,

கை நிறைய பொருட்களோடு..

அவளும் சென்று கொண்டு இருந்தாள்..

ஒரு வேளை,,

அவளும் அந்திம காலத்தில்..

என்னைபோலவே...

ஒரு வேலையாளோ அவளின் சொந்த வீட்டிற்க்கு..?

இளமையில் இழந்த அவளை..

இப்போது கண்டேன்..

என்னைபோலவே..

ஏனோ சுருக்கென்று வலித்தது மனதிலே..

No comments: