என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 11 January 2012

நிராசையான கனவுகள்

இழந்து விட்ட ஆசைகள்...

நிராசையான கனவுகள்..

இன்னமும்,,

மனதின் ஒரு மூலையில்.. ஏக்கங்களாய்..

தாளமுடியாமல் ,, கடவுளிடம் சொன்னேன்,,

என் மீது இரக்கம் கொண்டு,,

இழந்தவைகளை திரும்ப தருகிறேன் என்றார்,,,

சரி நன்றி கடவுளே  என்று சொல்லிவிட்டு ,,

ஆனால் எனக்கு இன்னொரு வரமும் வேண்டும் என்றேன்,,

என்ன என்று கேட்டார்..

இழந்து போன என் வயதையும்  கொடுத்தால்..

மீண்டும் அனுபவிப்பேன் என்றேன்,,

அது மட்டும் முடியாது என்றார்..

அப்படியானால்,,

எனக்கு எதுவும் வேண்டாம்  ,,

என்று சொல்லிவிட்டேன் இந்த வயதான அந்திம காலத்தில்..

கடவுளும் மறைந்துவிட்டார்..

No comments: