என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 11 January 2012

காதல் வசத்தில் சிக்குண்டு,, 


நட்பு வட்டத்தில் திளைத்து,, 


அழகிய சுகங்களை அனுபவித்து,, 


என் இளமை காலங்களை கழித்து,, 


நான் அந்திம காலத்திற்கு வரவில்லை...


ஏதுமறியா உழைப்பு.. 


அவமானம் கண்ட மனம்,, 


அதனால் உண்டான ரணம்,, 


இன்று வரை நீண்ட வடுக்களாய்.. 


மனதில்.. 


ஆனாலும், எனக்கு இன்றும்,,  


இன்றைய இளையோரை போல,,


சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி வாழ , ஆசைதான்,, 


ஆனாலும் என் செய்ய ,, ?


கடந்து விட்ட காலங்கள்..


வயதின் சுருக்கங்களோடு,, உடலில்.. 


..ஏக்கங்களாய்.. மனதில்..

No comments: