சாரல் சாரலாய்..
மெல்லிய நீர்த்திவலைகள்,,
என் முகத்தில் பட்டு தெறித்தன..
... ...
வசந்த கால மலர்கள்,,
எனக்கு மட்டுமே நறுமணம் அள்ளி வீச காத்திருந்தன..
அழகிய விஸ்தாரமான, பசுமை புல்வெளி,,
எனக்குள் அழகிய உறக்கத்தை தர,,
எனக்கே எனக்காக காத்திருந்தது..
மெல்லிய சில்லென்ற தென்றல்கூட,,
என் வருகைக்காக சற்று அமைதியுடன் காத்திருந்தது,,
நேரம்,, வெகு நேரமாய் மாறியதும்,,
சலித்து போன,,
புல்வெளியும்,, நறுமணமும்,,
அழகிய தென்றலும்,,
சென்று விட்டன,,
சாரல் மயக்கத்தில்..
எனக்கே எனக்காக காத்திருந்த,,,
வசந்தங்களை அறிந்தும் அறியாமல்,,
மயக்கத்தின் உச்சியில் இருந்தேன்..
வெகு நேரம் கழித்து,,
மயக்கம் தெளிந்து எழுந்த பின்,,
வசந்தங்கள் எல்லாம் மறைந்தது,,
மெல்ல தெரிய வந்தது..
ஆடும் வரை ஆடியாயிற்று...
இனி,, ?
மெல்ல பயம் கலந்த ஒரு சோகம்,,
அடிவயிற்றில்..
No comments:
Post a Comment