என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 10 January 2012

என்றாவது ஒரு நாள்,,

அதிகாலை வழிபாடு என்பது எனது ஒரு ஆசை..

சற்றே முயற்சி செய்து,,

இன்று அதிகாலை எழுந்தேன்,,

குளிர் நீரில் நீராடி,,

ஆவல் நிறைந்த  மனதோடு,,

அழகிய மணம் வீசும் கோவிலை அடைந்தேன்,,,

சற்றே கஷ்டப்பட்டு ,,

மனதை சலனமற்று நிறுத்தினேன்,,

மெல்ல மனம் முழுதும்,, 

இறைவனின் நினைவுகளால் நிரப்பினேன்,,

சாந்தமும்,, பேரமைதியும்,,

மெல்ல எனக்குள் குடி புக உணர்ந்தேன்,,,

மெல்ல கண் திறந்தேன்,,,

எதிரில் நின்ற மனிதர் எல்லாம்,,,

கடவுள் போல தெரிந்தனர்,,

இனி தினசரி அதிகாலை வழிபாடு என்பது,,,

என் விருப்பம்,,

No comments: