காற்றில் தவழ்ந்து வந்தது,,
அந்த அழகிய சிரிப்பொலி..
அந்த சிரிப்பொலி வந்த திசை நோக்கினேன்,,
இன்னும் நிறைய சிரிப்பொலிகள் கலந்து,,
இன்னும் இனித்தது..
மெல்ல கண்களை சுருக்கி கொண்டே,,
கூர்ந்து நோக்கினேன்,,
தூரத்தில்,, உற்சாகத்தில்..
மழலை பட்டாளம்,,
இந்த முதியவனின்,, தனிமையை,,
கடந்து சென்றன அந்த சிரிப்பொலிகள்..
எனக்கும் மௌனமான ஒரு மகிழ்ச்சி கொடுத்தது,,
No comments:
Post a Comment