என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 12 January 2012

அன்பு மனம்,,

தினம் தினம்,,

எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் அவர்,,

அவர் ..?

80   வயது பெரியவர்..

இன்று வரை,, தவறவில்லை,,

அதிகாலை எழுந்து,, 

தோட்ட வேலைகளை செய்ய ஆரம்பித்து விடுவார்,,,

எதற்காகவும் அவர் வேலைகளை நிறுத்தியதில்லை..

மதியம் வரை கடும் உழைப்பு,.

பிறகு,, சிறு உறக்கம்,,

மீண்டும் உழைப்பு... மாலை வரை,..

அவருக்கென்று   சிறு நட்பு வட்டம்,,

அதில் சிறிது அரட்டை...

என்னிடமும் அளவற்ற பாசம்,,

நெற்றி நிறைய திருநீறு அணிந்து,,

தவறாமல் கோவில்களுக்கும் செல்வார்..

அளவற்ற பாசம்,,

அதிக உழைப்பு,,,

அன்பு மனம்,,

இன்று வரை ,, அவரை நோய் தாக்கியதாக எனக்கு நினைவில்லை..

இன்று வரை ஆரோக்கியமாய்..

இவர் இப்படி..

சற்றே சிந்தித்து பார்த்ததில்...

இன்று இளைஞர்கள்,,, 

ஏன் நானே கூட,,,

அவ்வப்போது வரும் காய்ச்சல்,, தலை வலிகளுடன் ,,,

ஒரு வாழ்க்கை,,, வாழ்கிறோம்,,

எங்கே போகிறோம் நாம்...?





No comments: