என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 11 January 2012

உறக்கத்தை தேடி ,,

பின்னிரவு முடிந்து,,

முன் அதிகாலை தனிமையில்,, நான்,,
இப்போது,,
உறக்கம் வரவில்லை..
எழுந்து வெளியே வந்தேன்,..
மார்கழி மாத கடும்குளிர்,,
என்னை நடுங்க வைத்து அன்போடு வரவேற்றது,,
தெளிவான வானம்,,
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்..
புதிதாய் எப்படி வர்ணிப்பது என்ற குழப்பத்தில் அழகிய நிலவு,,
எல்லாமே அழகுதான்,,
நடுங்க வைக்கும் குளிரில்..
மனம் வெறுமையாக மாடியில் நின்றேன்,,
தன்னந்தனியே,,
இரைச்சலற்ற பூமி பெண்ணும்,,
அழகிய உறக்கத்தில் இருப்பது போன்ற உணர்வு,,
குளிரை போக்க புகை பிடிக்க நினைத்தேன்..
சட்டென்று ஒரு சிந்தனை..
புகையை வெளியிட்டு,,
இந்த அழகிய இயற்கையை கெடுக்க,,
ஏனோ மனம் வரவில்லை..
அணைத்து விட்டேன்,,
நல்ல நிகழ்வை செய்த திருப்தியில் இருப்பது போன்ற ,,
ஒரு அதிசய உணர்வில்,,
என் மனம்,, இப்போது ,,
மெல்ல உறக்கம் எனை அழைத்தது,,
இயற்கைக்கு பாரமாய் நிற்க விரும்பவில்லை..
உறக்கத்தை தேடி ,,
மீண்டும் சென்று விட்டேன்,,

No comments: