"..அப்பா.. "
இந்த பூமியில் நாம் தடுக்கி விழாமல் இருக்க,,
கடவுளால் படைக்க பட்டவர்...
...
உணர்சிகளை உள்வைத்து,,
நமக்கே நமக்காக ,,
ஒரு வாழ்க்கையை வாழ்பவர்..
நினைக்கும்போதெல்லாம்,,
விழியோரம்,, எட்டி பார்க்கும் ,, ஒரு துளி கண்ணீர் சொல்லும்,,
இவரின் அளவற்ற அன்பை,, பாசத்தை..
இருப்பினும்,, இப்போதெல்லாம்,, எனக்குள் ஒரு சுயநலம்,,
அப்பா செல்வதற்கு முன்,,
நான் சென்று விட வேண்டும் ,, இறைவனிடம்,,
இதுவே என் சுயநலம் மிக்க ஒரு ஆசை..
No comments:
Post a Comment