நேற்றைய கனவுலகில்..
சட்டென்று தலை குப்புற விழுந்தேன்,,
எப்படி என்று தெரியவில்லை..
லேசான மயக்கம் தெளிந்து ,, எழுந்தேன்,
கருகலான வாசனை என் நாசியை துளைத்தது,,
மெல்ல கண்விழித்தேன்,,
அழகிய வனம்,,
கோரமான தீயின் பிடியில்...
மரங்கள் பற்றி எரிந்து கொண்டு இருந்தன,,
வன உயிர்கள் எரிந்து சாம்பலாகின..
என்னை தவிர,,
அனைத்தும் அங்கே நெருப்பு குழம்பில்..
இது போதாதென்று,
விண்ணில் இருந்தும் நெருப்பு மழை..
எனக்கு ஒன்றும் ஆகவில்லை..
இருப்பினும்,,
சுடும் பூமியில்..
பெரும் தணலில்..
தனி ஒருவனாக நான்,,
திடுக்கிட்டு விழித்தேன் ....
மெல்ல சிந்தனை செய்ததில்..
கடந்த கால இழப்புகளின் வலி,,
என் ஆழ்மனதை இன்னும் அரித்து கொண்டு இருக்கிறது..
என்பதை மெல்ல புரிந்தேன்,,
No comments:
Post a Comment