விழி முழுதும் நிரம்பிய நீர் கொண்டு,,
என்னை வரவேற்றாள்.. அவள்..
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து,,
காலம் பல கடந்து,,
வருடம் பல தொலைத்து,,.. ,,
உறவு பல பிரிந்து,,,
வாழ்க்கை பல தொலைத்து,,
நேசித்த மனங்களை விட்டு,,
அழகிய ஊரை விட்டு,,
இன்று,,
பொருள் பணம் சேர்த்து வந்திருக்கிறேன்,,
என்னை வரவேற்ற அவள்..
தாய்,,
அவளின் அடுத்த வார்த்தை...
மீண்டும் கிளம்பத்தான் வேண்டுமா,,
இங்கேயே இருக்க மாட்டாயா ?
அவளின் பாசம் முன்னே,.,,
நான் சேர்த்த பொருள், பணம்,,
குப்பை போல தெரிந்தது,,
No comments:
Post a Comment