என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 24 April 2012

இயற்கை புதிதாய்

சட்டென்ற வினாடியில்,,

என் கனவுலகில் இருந்து,,

விடை பெற்றேன்..

**
துயில் களைந்து எழுந்தேன்,,

அது இருள் பிரியா ,,

அதிகாலை பொழுது..

வினாடியில் மனதை,,

இறைவனிடம் செலுத்தி,,

பின் வெளியே வந்தேன்,,

**
நேற்றிரவு பெய்த மழையின் வாசம்,,

இன்னமும் மிச்சம் இருந்தது,,

மெல்ல நடை பிடித்து,,

பின் வேகம் பிடித்து,,

குளிர்ந்த தென்றலை,

ரசித்தபடி,,

அழகிய பள்ளத்தாக்கை,,

வந்தடைந்தேன்..

**
அழகிய நீரோடை ,,

வனப்பு மிக்க சோலை மரங்கள்..

என்னை வசீகரித்தன..

தினமும்தான் ரசிக்கிறேன்,,

ஆனால் என்றுமே புதிதாய்,,

வனப்பாய்,,

இயற்கை மிளிர்கிறது..

**
மிகபெரும் ரசனை மிகுந்த ,,

படைப்பாளி,,

இறைவன் என்பதை மீண்டும் ஒருமுறை,,

உணர்ந்தேன்..


No comments: