என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 18 April 2012

வலிகள் மறையும் காலம்

நீண்ட காலமாக,,

எனக்குள் உறைந்திருக்கும்,,

வலிகள்,,

மெல்ல உருகும் நேரம்..

**
மெல்ல மனது,,

பன்னீராக உருவெடுக்கிறது..

**
அழகிய ஒத்தடங்கள்,,

எங்கிருந்தோ வந்து,,

என் மனதிற்கும்,,

இதயத்திற்கும்,,

ஆறுதல் தருகின்றன..

**
இறுகி போன உதடுகளில் இருந்து,

மெல்ல புன்முறுவல் ,,

வலிக்காமல் வருகிறது..

**
மூளை செதில்களை சுற்றி,,

படர்ந்திருந்த,,

கசடு எண்ணங்கள்,,

அழிந்து கொண்டு இருக்கிறது..

**
ஆக மொத்தத்தில்,,

நான்,,,

நானாக உருவெடுத்து கொண்டு இருக்கிறேன்..

இந்த மாற்றம் எதனால்,,

என்று சிந்தனை செய்த போது,,

இங்கேதான் கடவுள் தெரிந்தார்...

**
இங்கே,,

கடவுளின் செயல்,

நல்ல நட்புகளை ,,

ஏற்படுத்தி கொடுத்ததுதான்..

**
சூழல்... வாழ்வியல்.. வலிகள் மறையும் காலம்..

**

No comments: