வலிகள் மறையும் காலம்
நீண்ட காலமாக,,
எனக்குள் உறைந்திருக்கும்,,
வலிகள்,,
மெல்ல உருகும் நேரம்..
**
மெல்ல மனது,,
பன்னீராக உருவெடுக்கிறது..
**
அழகிய ஒத்தடங்கள்,,
எங்கிருந்தோ வந்து,,
என் மனதிற்கும்,,
இதயத்திற்கும்,,
ஆறுதல் தருகின்றன..
**
இறுகி போன உதடுகளில் இருந்து,
மெல்ல புன்முறுவல் ,,
வலிக்காமல் வருகிறது..
**
மூளை செதில்களை சுற்றி,,
படர்ந்திருந்த,,
கசடு எண்ணங்கள்,,
அழிந்து கொண்டு இருக்கிறது..
**
ஆக மொத்தத்தில்,,
நான்,,,
நானாக உருவெடுத்து கொண்டு இருக்கிறேன்..
இந்த மாற்றம் எதனால்,,
என்று சிந்தனை செய்த போது,,
இங்கேதான் கடவுள் தெரிந்தார்...
**
இங்கே,,
கடவுளின் செயல்,
நல்ல நட்புகளை ,,
ஏற்படுத்தி கொடுத்ததுதான்..
**
சூழல்... வாழ்வியல்.. வலிகள் மறையும் காலம்..
**
No comments:
Post a Comment