என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Monday 9 April 2012

சோழர் காலத்தில்

ஆலய மணி ஓசை கேட்டு,,

அழகிய சிட்டு குருவிகளின் கானம் கேட்டு,,

அதிகாலை சேவலின் குரல் கேட்டு,,

ஈரம் கலந்த தென்றல் காற்றை ,,

சுவாசித்து,,

ஜன்னலின் அருகே தெரிந்த,,

ஆலமரத்தில்..

பறவைகளின் உற்சாகம் கண்டு,,

மனம் மெல்ல பரவசம் கொண்டு,,

சற்றே தூரமாய்,, பனியோடு இருந்த,,

வயல்வெளிகளின் அழகை கண்டு,,

கடவளுக்கு நன்றி சொல்லி..

அழகிய அதிகாலை பொழுதில்,,

மெல்ல போர்வையை விலக்கி..

துள்ளி எழுந்தேன்,,

சோழர் காலத்தில்,, ஒரு கிராமத்தில்..

அழகிய கனவில்..

No comments: