என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 10 April 2012

கதை சொல்லும் கனவுகள்.

ரசனை மிக்க பல்லவர் காலத்தில்,,

ஓர் நாள்...

***
சில்லென்று தென்றலை,,

அழகிய வேலைப்பாடமைந்த,,

சில நூறு சன்னல்கள் உள்வாங்கி,,

திரை சீலைகளை பறக்கவைத்து,,

தெளிந்த வெளிச்சம் பரப்பி,,

அந்த அழகிய,,

விரிந்த வசந்த மண்டபத்தை,,,

பேரழகோடு மின்ன செய்ததது,,

அழகிய நிலவு...

***
அந்த அழகிய நிலவோடு,,

ஓர் அழகிய பேரழகியும்.. ,,

அந்த வசந்த மண்டபத்தை,,

அழகு மிளிர செய்தாள்...

***
நடுநாயகமாய்,,

மன்னன்,,

சுற்றிலும் சபையோர்..

வெகு ஆவலோடு,,

அவளின் நடனம் காண..

***
அந்த பேரழகி,,

சலங்கையிட்ட கால்களுடன்,,

நடனமாட தயாராக ,,

தலை குனிந்து வணக்கம் ,,

சொன்னாள் சபையினருக்கு...

***
பேரழகின் ரசனையில்,,

நனைந்தபடி,,

அவளின் நடனம் ரசிக்க ,,

தயாரானேன்,,

அந்த மண்டபத்தின்,,

பாது காவலர்களில்,,

ஒருவனான நான்....

****
சூழல்.. கதை சொல்லும் கனவுகள்..

*******

No comments: