என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 19 April 2012

பிரிவின் வலி

மெல்லிய ஈரத்தில்,,

மனம் அமிழ்ந்து,,

மென் சோக உணர்வுகளில்,,

இதயம் விம்மி,,

மெல்லிய கண்ணீர் துளி,,

உருவாகி,,

கண்ணோரம் கசிந்து,,

பேச இயலாமல் ,,

விக்கித்து,,

தலை கவிழ்த்து நிற்பதுதான்,,

பிரிவின் வலி என்றால்..

இப்போது ,,

நானே அவ்வாறே,,

தலை கவிழ்ந்து ,,

நிற்கிறேன்,,

***
பிரிவு,, துயரம். கண்ணீர்,,

***

No comments: