என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Monday 23 April 2012

சுடும் நிஜங்கள்

மனம் நிறைய..

சிந்தனை குப்பைகளின் சங்கமம்..

**
வெகு தூரம்,,

பிரயாணம் செய்யும்,,

கனவு அசுத்தங்கள்..

**
சுற்றி சுழற்றி அடிக்கும்,,

எண்ணங்களில்,,

கனவுகளில்,,

மனம் முழுதும்,,

துர்வாடை காற்றின் அசுத்தங்கள்..

**
திக்கு தெரியாமல் நிகழ்காலம்,,

தேர்ந்த வழிகளில் கனவுக்கோலம்,,

**
இங்கே,,

செல்லாக்காசாகி வீதியோரம் நின்று,,

அங்கே,,

உலகிற்கே ராஜாவாக சிம்மாசனம் கொண்டு..

**
வீதியோரம் குப்பைகள்,,

நாசியை துளைக்க,,

திடுக்கிட்டு உரைக்கும் நிகழ்காலம்,,

ஊமை கனவுகளை,,

சரமாரியாக பழிக்கிறது,,


**

சூழல் ... சுடும் நிஜங்கள்.. நிகழ்காலம்..

***

No comments: