என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Monday 23 April 2012

இதயம் கீறுகிறாய்

என் இதயம் கீறுகிறாய்,,

என் சொல்பேச்சை கேளாமல் திரிகிறாய்..

எனக்குள் வலிகளை உருவாக்குகிறாய்..

என் இலக்கணம் மீறுகிறாய்..

மென்மை கொண்ட என்னை,,

வலிகளுக்குள் செலுத்துகிறாய்,,

நான் பொறுமை அதிகம் கொண்டவள் ,,

இருப்பினும் அவ்வபோது ,,

என் விதி மீறினால்,,

மனிதா !!,,.

நான் பெரும் சூறாவளியாய் உன்னை

சாய்த்திடுவேன் ,,

**
இயற்கை அன்னையின் பெரும்கோபம் ,,

**

No comments: