என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 7 April 2012

சிட்டு குருவி

வீட்டு முற்றத்தில்,,

அல்லது,,

வீட்டு மாடியில்,,

சிறிது அரிசி பருக்கைகளை,,

தூவி,,

சிறு குச்சி ஒன்றால்,,

முறத்தை நிமிர்த்தி வைத்து,,

அரிசி பருக்கைகளை சாப்பிட வரும்,,

சிட்டு குருவிகளை பிடித்து,,

விளையாடி,,

சிட்டு சிட்டு குருவி சேதி தெரியுமா என்று பாடி திரிந்தது,,

ஒரு காலம்,,

இன்று,,

அதே ஆனந்தத்துடன்,,

விளையாட ,,

சிட்டு குருவிகள் எங்கே ???

*****
சூழல்... தொலைந்த வாழ்வியல்..

******

No comments: