என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 21 April 2012

வாய்மை தவறேல்..

உண்மை ....

அப்போது தகிக்க வைப்பினும்,,

பிறகு குளிர வைக்கும..

**
பொய்யுரை பேசி,,

அவ்வப்போது தப்பித்து கொண்டாலும்,,

பிறகு வரும் சிக்கல்,,

தீரா காயத்தை கொடுக்கின்றன..

**
காலம் பல கடந்து,,

வலிகள் பல சுமந்து,,

வெற்றிடம் வந்த பின்,,

இப்பொழுதுதான் தெரிகிறது ,

உண்மை மேலானது என்று..

**
உண்மை,,

அப்போது வலித்தாலும்,,

தீர்வுகள் என்றுமே சுபம்..

பொய்யுரை போல..

அவ்வப்போது தப்பித்து,,

பல பல சிக்கல்களில்,,

மாட்டிகொள்வதை போல அல்லாமல்..

உண்மை.. நிம்மதி என்றென்றும்,,

**
உண்மை என்னும் உன்னத சூழலில்,,

அழகிய எண்ணங்கள் சூழ,,

நிம்மதி கொண்ட மனதோடு,,

வாழ்வியல் புரிதலோடு,,

நான்,, இந்த வினாடியில்..

***
சூழல்.. வாழ்வியல்.. வாய்மை தவறேல்..

***

No comments: