வாய்மை தவறேல்..
உண்மை ....
அப்போது தகிக்க வைப்பினும்,,
பிறகு குளிர வைக்கும..
**
பொய்யுரை பேசி,,
அவ்வப்போது தப்பித்து கொண்டாலும்,,
பிறகு வரும் சிக்கல்,,
தீரா காயத்தை கொடுக்கின்றன..
**
காலம் பல கடந்து,,
வலிகள் பல சுமந்து,,
வெற்றிடம் வந்த பின்,,
இப்பொழுதுதான் தெரிகிறது ,
உண்மை மேலானது என்று..
**
உண்மை,,
அப்போது வலித்தாலும்,,
தீர்வுகள் என்றுமே சுபம்..
பொய்யுரை போல..
அவ்வப்போது தப்பித்து,,
பல பல சிக்கல்களில்,,
மாட்டிகொள்வதை போல அல்லாமல்..
உண்மை.. நிம்மதி என்றென்றும்,,
**
உண்மை என்னும் உன்னத சூழலில்,,
அழகிய எண்ணங்கள் சூழ,,
நிம்மதி கொண்ட மனதோடு,,
வாழ்வியல் புரிதலோடு,,
நான்,, இந்த வினாடியில்..
***
சூழல்.. வாழ்வியல்.. வாய்மை தவறேல்..
***
No comments:
Post a Comment