அழகிய மிக பெரும் ,,
நவநாகரீக கட்டிடம் அது..
**
யாரோ பெரும் செல்வாக்கான ,,
மனிதர்களால் கட்டிய கட்டிடம் போலும்,,
திரும்புமிடமெல்லாம் பிரமிப்பு,,
அதனுள் இருந்த அத்துணை கடைகளும்,,
இன்னும் பிரமிப்பு,,
**
அலங்கார விளக்குகளால்,,
பொருட்கள் மின்னின,,
கடும் வெப்பம் தணிக்க,,
அதிகப்படியான குளிரூட்டும் ,,
இயந்திரம் உதவியோடு,,,
சிலு சிலுவென்று இருந்தது,.,.
***
பெரும் கடலென மக்கள் கூட்டம்,
உழைத்து சேர்த்த பணத்தை,,
வெற்று பகட்டோடு,,
கடைகாரர் சொன்ன விலைக்கே,,
பேரம் பேசாமல்,,
வாங்கி சென்றனர்,...
**
எங்கெங்கு காணினும்,,
மக்கள் கூட்டம்,,
பெரும் பணத்தை கையில் வைத்து,..
பொருட்களை குவித்து,,
வெளியேறிய வண்ணம் இருந்தனர்..
சொற்ப பணம் கொண்டு,,
ஏதும் வாங்காமல்..
அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி.,
வெளியே வந்தேன்..
**
வெளியே கட்டிடத்தின் ஓரமாக,,
கடும் வெய்யிலில் நின்றிருந்த,,
பூக்கார கிழவியிடம்,,
முழம் என்ன விலை என்று,,
வாய் ஓயாமல் பேரம் பேசி கொண்டு இருந்தது,,
அந்த பெரும் பணக்கார கூட்டம்..
***
சூழல்.. உழைப்பு.. வீணான பொழுதுகள்..
***
நவநாகரீக கட்டிடம் அது..
**
யாரோ பெரும் செல்வாக்கான ,,
மனிதர்களால் கட்டிய கட்டிடம் போலும்,,
திரும்புமிடமெல்லாம் பிரமிப்பு,,
அதனுள் இருந்த அத்துணை கடைகளும்,,
இன்னும் பிரமிப்பு,,
**
அலங்கார விளக்குகளால்,,
பொருட்கள் மின்னின,,
கடும் வெப்பம் தணிக்க,,
அதிகப்படியான குளிரூட்டும் ,,
இயந்திரம் உதவியோடு,,,
சிலு சிலுவென்று இருந்தது,.,.
***
பெரும் கடலென மக்கள் கூட்டம்,
உழைத்து சேர்த்த பணத்தை,,
வெற்று பகட்டோடு,,
கடைகாரர் சொன்ன விலைக்கே,,
பேரம் பேசாமல்,,
வாங்கி சென்றனர்,...
**
எங்கெங்கு காணினும்,,
மக்கள் கூட்டம்,,
பெரும் பணத்தை கையில் வைத்து,..
பொருட்களை குவித்து,,
வெளியேறிய வண்ணம் இருந்தனர்..
சொற்ப பணம் கொண்டு,,
ஏதும் வாங்காமல்..
அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி.,
வெளியே வந்தேன்..
**
வெளியே கட்டிடத்தின் ஓரமாக,,
கடும் வெய்யிலில் நின்றிருந்த,,
பூக்கார கிழவியிடம்,,
முழம் என்ன விலை என்று,,
வாய் ஓயாமல் பேரம் பேசி கொண்டு இருந்தது,,
அந்த பெரும் பணக்கார கூட்டம்..
***
சூழல்.. உழைப்பு.. வீணான பொழுதுகள்..
***
No comments:
Post a Comment