என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Monday 16 April 2012

மன அதிர்வுகள்

ஏனோ தடைபட்டது,,

உறக்கம்..

**
நேரம் பார்த்தேன்..

பின்னிரவுக்கும்,,

அதிகாலைக்கும்,,

இடைப்பட்ட ஒரு நேரம்..

**
மெல்ல வெளியே வந்தேன்..

பூரண நிசப்தம்,,

சில்லென்ற தென்றலுடன்..

மெல்ல சோர்வகன்று,,

புத்துணர்வு பிறந்தது..

**
வேலை முடிந்து,,

விடை பெரும் பரபரப்பில்,,

முழு நிலவு,

தன் கடைசி நேர ஒளியை,,

புவிக்கு வழங்கி கொண்டு இருந்தது...

**
அழகிய புத்துணர்வோடு,,

மெல்லிய மனதின் சப்தங்கள்,

ஏதோ எனக்குள் சொல்லியது..

**
அண்ணாந்து பார்த்தேன்..

நிசப்தமான பூமி,

தன்னந்தனியே நான்,,

மேலே இறைவன்,,

இருப்பது போல உணர்வு..

**
என் மனதிற்கும்,,

இறைவனுக்கும்,,,

அழகிய உரையாடல்கள்,,

நடப்பது போல பிரமை..

என் மன அதிர்வுகள்,,,

இறைவனிடம் சேர்வது போன்ற ,,

ஒரு நினைவு..

**
ஒரு விநாடி சிந்தித்து பின்,,

மெல்ல கண்மூடி,,

நல்ல எண்ணங்களை,,

மனதில் நிறுத்தி,,

மெல்லிய அதிர்வுகளாக,,

இறைவனிடம் அனுப்பினேன்,,

இறைவனும்,,

பதிலுக்கு நல்ல ஆசிகளை

எனக்குள் அதிர்வுகளாக

விதைத்தார்..

நேரம் போனதே தெரியவில்லை,,

கண் திறந்தபோது,,

விடிந்திருந்தது..

No comments: