மன அதிர்வுகள்
ஏனோ தடைபட்டது,,
உறக்கம்..
**
நேரம் பார்த்தேன்..
பின்னிரவுக்கும்,,
அதிகாலைக்கும்,,
இடைப்பட்ட ஒரு நேரம்..
**
மெல்ல வெளியே வந்தேன்..
பூரண நிசப்தம்,,
சில்லென்ற தென்றலுடன்..
மெல்ல சோர்வகன்று,,
புத்துணர்வு பிறந்தது..
**
வேலை முடிந்து,,
விடை பெரும் பரபரப்பில்,,
முழு நிலவு,
தன் கடைசி நேர ஒளியை,,
புவிக்கு வழங்கி கொண்டு இருந்தது...
**
அழகிய புத்துணர்வோடு,,
மெல்லிய மனதின் சப்தங்கள்,
ஏதோ எனக்குள் சொல்லியது..
**
அண்ணாந்து பார்த்தேன்..
நிசப்தமான பூமி,
தன்னந்தனியே நான்,,
மேலே இறைவன்,,
இருப்பது போல உணர்வு..
**
என் மனதிற்கும்,,
இறைவனுக்கும்,,,
அழகிய உரையாடல்கள்,,
நடப்பது போல பிரமை..
என் மன அதிர்வுகள்,,,
இறைவனிடம் சேர்வது போன்ற ,,
ஒரு நினைவு..
**
ஒரு விநாடி சிந்தித்து பின்,,
மெல்ல கண்மூடி,,
நல்ல எண்ணங்களை,,
மனதில் நிறுத்தி,,
மெல்லிய அதிர்வுகளாக,,
இறைவனிடம் அனுப்பினேன்,,
இறைவனும்,,
பதிலுக்கு நல்ல ஆசிகளை
எனக்குள் அதிர்வுகளாக
விதைத்தார்..
நேரம் போனதே தெரியவில்லை,,
கண் திறந்தபோது,,
விடிந்திருந்தது..
No comments:
Post a Comment