என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 7 April 2012

மனிதனை தவிர

எதிர்காலத்தில் ஒரு நாள்,,

வெப்பம் தாளாமல்,,

வெடித்து சிதறியது,,

சூரியன்....

பூமி எங்கும் இருள் அப்பி,,

வெளிச்சத்திற்கு ஏங்கிய போது,,

மெல்லிய சாரல் வீசியது,,

பின் வேகம் எடுத்து,,

சுற்றி சுழன்று,,

பெரும் சுனாமியாய்,,

மெல்ல உலகை தனக்குள்..

விழுங்கியத...

கண்ணில் தெரிந்த கட்டிடமெல்லாம்,,

நீரில் முழ்கி..

ஒரு உயரமான மரத்தின் மீது,,

வேடிக்கை பார்க்கிறேன்,, ,,

என்னை சுற்றி ,,

என் கண்ணுக்கெட்டியவரை,,

தண்ணீர் தண்ணீர்..

ஒரு ராட்சஷ பசியோடு,,

உலகை விழுங்கி,,

என்னையும் தனக்குள்,,

இழுக்க ஆரம்பித்தது,,

சற்றே மயான,, மையமான அமைதி,.

வெறுமை சூழ்ந்த ஒரு கணத்தில்..

சட்டென்று உயிர் பெற்றது,,

பூமி..

இம்முறை புத்தம் புதிதாய்,,

பச்சை பசுமையாய்,..

அழகிய விலங்குகளோடு..

மனிதனை தவிர..

No comments: