என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 17 February 2012

அழகிய காதல்,...

வறண்ட பிரதேசம் ,,

வெயில் என்ற அரக்கனின் கோர பிடியில் ...


வியர்வை எரிச்சலோடு வழிந்தோட..


கண்கள் மெல்ல இருண்ட பொழுதில்..


நிழலாக...


மெல்லிய சாரலுடன்,,

அழகிய தென்றலுடன்,,

அழகிய சிற்பமாக வந்தாய்.

காலம் பல கடந்து,,

இன்று அந்திம காலம் நெருங்கிய பின்னும்,,

நான் உனக்கு முன்னே,,

நீ எனக்கு முன்னே,,

செல்ல வேண்டும் என்று ,, பிரார்த்திக்கிறோம் கடவுளிடம்,

விந்தைதான்,,

ஈருடல் ஓருயிராக வாழ்ந்து,,

அந்திம காலத்தில் மட்டும்,,

ஒருவரை ஒருவர் முந்தி செல்ல ,,

ஆசைபடுகிறோம்,,

காதல் ,,

அழகிய காதல்,...

No comments: