என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Monday 20 February 2012

தெளிந்த வானம்,,

தெளிந்த வானம்,,

அழகிய குழந்தைகளை போல..

கண் சிமிட்டும் நட்சத்திர கூட்டம்,,

பின்னிரவு தனிமையில்,,

மனம் மெல்ல விண்மீன் குழந்தைகளை ரசிக்க தொடங்கியது.

ஒரு குழந்தை மட்டும் ஏனோ வேகம் பிடித்து,,

எங்கோ விரைந்து சென்றது.

விழிகளை அதன் மேல் படர விட்டு,,

நானும் பின் தொடர்ந்தேன்,,

சற்றே சிரமத்துடன்,,

என் பார்வையை அதன் மேல் செலுத்தி,,

வழியெங்கும் தொடர்ந்தேன்.

அதன் வேகம்,, பெரு வேகமானது,,

அதன் வேகத்தில்,,

சட்டென்று பளீரென்று மின்னி மறைந்து,,

எங்கோ என் பார்வையில் இருந்து ,,

தப்பி விட்டது.

தேடலை தொடர இயலாமல்,.,

மனம் தவிப்படைந்து,,

பின்,,

வெறுமை அடைந்தது..

No comments: