என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Monday 20 February 2012

கனவு காதலன்,,

முற்றிலும் நனைந்த,,

ஒரு மழை நேரத்தில்..

உடலெங்கும் சிதறிய மழை துளிகளின்,, தாக்கத்தில்,

மெல்ல உடல் நடுங்கியது.

மழையும்,, சாரலும்,,

... கண்ணை மறைத்த அந்த நேரத்தில்,

மெல்லிய வாசனை,,

என் மேனியெங்கும் வியாபித்து,,

அந்த மழை வாசனையை கூட,,

லேசாக மங்க செய்தது.

சாரலில் நனைந்த துப்பட்டாவால்,

நீர் வடிந்த முகத்தை ஒற்றியபடி,,

அவளின் அருகாமை,,

மழையின் குளிர்ச்சியைவிட,,

இன்னும் அதிகமாக குளிர செய்தது,,

மெல்ல ஒரு வினாடியில்,,

என்னை கண்டுகொண்டாள்,,

ஒரு சிறிய சிநேக சிரிப்பில்..

என் உள்ளம் முழுதும் கொள்ளை கொண்டவள்..

மெல்ல உதடு திறந்து,,

என் நீண்ட கால காதலை ,,

ஏற்றுக்கொண்டாள்.

மகிழ்ச்சியில்,,

மழை நிரம்பிய ,,

அந்த மலை பிரதேசம் முழுதும் ,,

எதிரொலிக்க,,

உற்சாக குரல் எழுப்பியபோது,,,

நன்றாகவே பொழுது விடிந்து விட்டிருந்தது..

No comments: