என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Monday 17 December 2012

புழுதி காடு..

** நினைவுகள் **

எனக்கு பிடித்த,

புழுதி காடு..

**
வெற்று காலில்,

புழுதி படிய,

முட்கள் பாதம் கிழிக்க,

மண் தூவி, ,

மருத்துவம் செய்து ,

ஓடி திரிந்ததொரு காலம்..

**
ஆங்காங்கே,

சர்ப்பம் கண்டு,

பயந்து ஒளிந்ததொரு காலம்..

**
இரவு நேரங்களில்,

இந்த புழுதி காட்டின் மத்தியில்,

கூரை வீட்டின் வெளியே,

உறவுகள் இணைந்து,

உறங்கியதொரு காலம்..

**
எல்லாம் தித்திப்பு நினைவாக,

கண்ணீர் சுமந்தபடி,

இன்று நான் வெறும்,

புழுதி காட்டை தரிசிக்கிறேன்,

தனிமை சூழ..

No comments: