என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Monday 17 December 2012

இது காதல் அன்றி....

** பிரியமுடன் **

என் பிம்பங்கள்,

உனக்குள் கால போக்கில்,

தொலைந்து போகும்..

என் நினைவுகள்,

உன்னுள் அழிந்தும் போகும்..

*
எல்லாம் மாயை என்று,

வாழ்வும் நகரும்...

**
ஆனால்,

வாழ்வின் ஏதோ ஒரு கணத்தில்,

அல்லது,

கஷ்ட கணத்தில்,

உனக்குள் நிச்சயம்,

நான் அல்லது,

என் காதல் அதிர்வு,

ஒரு வினாடி நேரம்,

வந்து போகும்..

**
இது நிதர்சனம்..

இது காதல் அன்றி வேறில்லை..

** பிரியமுடன் நான் **

No comments: