என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 10 July 2014

கனவுகள் 2

** கனவுகள் **

ஆழ்ந்த உறக்கம், 
ஒன்று எதிர்பாரா பரிசாய், 
சிறிய இடைவேளைக்கு பின், 
கிடைத்தது..

சலனமற்ற அமைதியான,
உறக்கம்..

என்னை சுத்தமாய்,
மறந்த ஒரு உறக்கம்,
அது..

அன்று,
வீட்டில் அனைவரும்,
ஊருக்கு சென்று விட,
தனித்து இருந்தேன்..

மிக சிறிய வீடுதான்,
என் வீடு..

மொத்தமே,
சமையலறையும் சேர்த்து,
மூன்று சிறிய அறைகள்தான்..

ஆழ்ந்த நிசப்த,
உறக்கம் மெல்ல,
தடைபட்டது..

என் வீட்டு கதவு,
யாரோ திறக்க முயற்சிக்கும்,
சப்தம்.

இருவரின் பேச்சு குரல்,
கிசுகிசுப்பாய் கேட்டது.

கடிகாரம்,
அதிகாலை இரண்டரையை,
காட்டியது..

சிலீரென்று ஒரு அச்சம்,
உடலெங்கும் பரவ,
கண்களை இறுக மூடியபடி,
அந்த குரல்களை கவனித்தேன்..

ஒன்றும் புரிபடவில்லை..

என் படுக்கை அறை கதவை,
தாளிட முயற்சிக்கிறேன்,
படுக்கையை விட்டு,
எழவும் முடியவில்லை..

ஏதேதோ இறைவன் நாமம்,
சொல்லி கண்களை,
இறுக்கமாக மூடி கொண்ட பொழுதில்,
முன்னறை கதவு திறந்து,
கொண்டது..

இரண்டு உருவங்கள்,
என்னருகில் நின்றன..

பின், அந்த உருவங்கள்,
மெல்ல குளியலறை பக்கம் சென்று,
கை கால் அலம்பும் சப்தம்,
கேட்டது..

ஒரு உருவம்,
இன்னொன்றிடம் ஏதோ,
சொல்லி விடைபெற்று கொள்ள,
இன்னொரு உருவம்,
என் படுக்கையின் கால்மாட்டில்,
அமர்ந்தது..

வினாடிகள் அச்சத்தின்,
பிடியில் வெப்பமாய்,
நகர்ந்தது..

சில விநாடிகள்தான்,
கண்களை மெல்ல திறந்து,
பார்க்கிறேன்,
அந்த உருவம் ஒரு பெண் ஆவி..

ஆனால்,
யாரென்று தெரியவில்லை..

சட்டென்று,
என் கால் பிடித்து,
வாயிலும் வயிற்றிலும்
அடித்து கொண்டு
கதறி அழ ஆரம்பித்தது.

அவ்வளவுதான்,
வியர்த்து எழுந்து,
உடை மாற்றி,
பதட்டத்தோடு என் இருசக்கர,
வாகனம் எடுத்து,
அருகில் உள்ள பேருந்து,
நிலையம் விரைந்தேன்..

அந்த இருளான,
பின்னிரவில், பேருந்து நிலையத்தின்,
மக்கள் நடமாட்டம் கண்ட பின்னே,
என் படபடப்பு அடங்கி,
கண்டது கனவென்று உணர்ந்தேன்..

ஒரு தேநீர் பருகி,
என்னை நானே ஆசுவாசப்படுத்தி,
கொண்டேன்..

**
இரு வருடங்களுக்கு முன்,
நிகழ்ந்த கனவு இது.
கனவின் பின்னணி காட்சிகளும்,
நிஜத்தின் பின்னணி காட்சிகளும்,
ஒன்று போலவே இருந்ததுதான் பெரும் வியப்பு *

No comments: