** கனவுகள் 1**
சென்ற நூற்றாண்டின் துவக்க வருடங்களில்,
ஒரு வார இறுதி நாளை,
கழிக்க,
ஒரு பெரிய பொழுது போக்கு,
கட்டிடத்திற்கு,
சென்றிருந்தேன்..
வார இறுதி நாள்,
என்பதால் நிறைய,
மக்கள் கூட்டம்..
அது ஒரு ஐரோப்பிய,
தேசம்..
அந்தி நேரம் துவங்கி,
மெல்ல இருள துவங்கி,
இருந்தது...
உற்சாகமாய் இருந்த,
அந்த பொழுதில்,
சட்டென்று ஒரு இனம் புரியா,
அச்சம் மனதை கவ்வி கொள்ள,
சற்றே தூரமாய் பார்வையை,
செலுத்தினேன்..
தூரத்தில் தெரிந்த,
ஒரு உருவத்தை உற்று,
நோக்கினேன்..
சில வினாடிகளில்,
சுதாரித்து அந்த உருவத்தை,
உணர்ந்து கொண்டதும்,
சிலீரென்று அடிவயிற்றில்,
பெரும் அச்ச பிரளயம்,
ஒன்று உருவானது..
அந்த உருவம் என்னையே,
குறிவைப்பதை இருந்தது..
மெல்ல மெல்ல,
அங்கிருந்த வெள்ளை இன,
மக்களுக்கும் சூழல் புரிபட,
அச்சம் கொண்டனர்..
நானும்,
என்னோடிருந்த சிலரும்,
மெல்ல பின்வாங்கி,
மாடி படி வழியே ஏறி,
பின்வாசல் அடைந்து,
தப்பித்து விடலாம்,
என்று முயற்சித்து கொண்டிருந்தோம்..
அந்த உருவம்,
மெல்ல அந்த பிரமாண்ட கட்டிடத்தின்,
கலையம்சங்களை பார்வையிட்டவாறே,
எங்களை நோக்கி நகர்ந்து,
வந்து கொண்டிருந்தது..
ஒரு வித அச்சம்,
உடலெங்கும் ஆட்டி படைக்க,
வேகமாய்,
தப்பித்து பின்வாசல்,
வழியே வெளியேறினேன்..
என்னோடு சிலரும்,
பீதியில் வெளியே வந்தனர்..
அந்த கடை வீதி எங்கும்,
சாரட் குதிரை வண்டிகளும்,
வெள்ளை தோல் சீமான்களும்,
சீமாட்டிகளும் வருவதும்,
போவதுமாய் இருந்தனர்..
சற்றே அச்சம் விலகி,
திரும்பி பார்க்கையில்,
மீண்டும் அந்த உருவம்,
எங்களை குறிப்பாக,
என்னை குறிவைத்து,
நகர துவங்க,
அச்சத்தில் அருகிருந்த,
பழமையான தேவாலயத்தின்,
உள்ளே நுழைந்தேன்..
மிக பழமையான,
பதினான்காம் நூற்றாண்டு,
தேவாலயம் போல இருந்தது..
இறுகிய மண்,
மற்றும் கற்களால் ஆன,
பெஞ்சில் உட்கார்ந்தபடி,
பலர் பிரார்த்தனை செய்து,
கொண்டிருந்தனர்..
அந்த பிரார்த்தனை கூட்டத்தின்,
நடுவே நானும் புகுந்து,
கொண்டேன்..
தூரத்து மேடையில்,
பாதிரியார் பிரார்த்தனை
செய்திகளை வாசித்து கொண்டிருந்தார்..
சில நிமிடங்கள் கழிந்து,
நுழைவாயிலை எட்டி பார்த்தேன்...
அந்த உருவம்,
வெளியே நின்று கொண்டிருந்தது..
அந்த உருவம்,
ஒரு பேய்..
எதற்கோ என்னை விரட்டுகிறது..
அச்சம் பயங்கரமாய்,
தாக்க,
திடுக்கிட்டு விழித்தேன்..
வியர்த்து கொட்டியது,
உடலெங்கும்..
கனவு கலைந்தது..
சென்ற நூற்றாண்டின் துவக்க வருடங்களில்,
ஒரு வார இறுதி நாளை,
கழிக்க,
ஒரு பெரிய பொழுது போக்கு,
கட்டிடத்திற்கு,
சென்றிருந்தேன்..
வார இறுதி நாள்,
என்பதால் நிறைய,
மக்கள் கூட்டம்..
அது ஒரு ஐரோப்பிய,
தேசம்..
அந்தி நேரம் துவங்கி,
மெல்ல இருள துவங்கி,
இருந்தது...
உற்சாகமாய் இருந்த,
அந்த பொழுதில்,
சட்டென்று ஒரு இனம் புரியா,
அச்சம் மனதை கவ்வி கொள்ள,
சற்றே தூரமாய் பார்வையை,
செலுத்தினேன்..
தூரத்தில் தெரிந்த,
ஒரு உருவத்தை உற்று,
நோக்கினேன்..
சில வினாடிகளில்,
சுதாரித்து அந்த உருவத்தை,
உணர்ந்து கொண்டதும்,
சிலீரென்று அடிவயிற்றில்,
பெரும் அச்ச பிரளயம்,
ஒன்று உருவானது..
அந்த உருவம் என்னையே,
குறிவைப்பதை இருந்தது..
மெல்ல மெல்ல,
அங்கிருந்த வெள்ளை இன,
மக்களுக்கும் சூழல் புரிபட,
அச்சம் கொண்டனர்..
நானும்,
என்னோடிருந்த சிலரும்,
மெல்ல பின்வாங்கி,
மாடி படி வழியே ஏறி,
பின்வாசல் அடைந்து,
தப்பித்து விடலாம்,
என்று முயற்சித்து கொண்டிருந்தோம்..
அந்த உருவம்,
மெல்ல அந்த பிரமாண்ட கட்டிடத்தின்,
கலையம்சங்களை பார்வையிட்டவாறே,
எங்களை நோக்கி நகர்ந்து,
வந்து கொண்டிருந்தது..
ஒரு வித அச்சம்,
உடலெங்கும் ஆட்டி படைக்க,
வேகமாய்,
தப்பித்து பின்வாசல்,
வழியே வெளியேறினேன்..
என்னோடு சிலரும்,
பீதியில் வெளியே வந்தனர்..
அந்த கடை வீதி எங்கும்,
சாரட் குதிரை வண்டிகளும்,
வெள்ளை தோல் சீமான்களும்,
சீமாட்டிகளும் வருவதும்,
போவதுமாய் இருந்தனர்..
சற்றே அச்சம் விலகி,
திரும்பி பார்க்கையில்,
மீண்டும் அந்த உருவம்,
எங்களை குறிப்பாக,
என்னை குறிவைத்து,
நகர துவங்க,
அச்சத்தில் அருகிருந்த,
பழமையான தேவாலயத்தின்,
உள்ளே நுழைந்தேன்..
மிக பழமையான,
பதினான்காம் நூற்றாண்டு,
தேவாலயம் போல இருந்தது..
இறுகிய மண்,
மற்றும் கற்களால் ஆன,
பெஞ்சில் உட்கார்ந்தபடி,
பலர் பிரார்த்தனை செய்து,
கொண்டிருந்தனர்..
அந்த பிரார்த்தனை கூட்டத்தின்,
நடுவே நானும் புகுந்து,
கொண்டேன்..
தூரத்து மேடையில்,
பாதிரியார் பிரார்த்தனை
செய்திகளை வாசித்து கொண்டிருந்தார்..
சில நிமிடங்கள் கழிந்து,
நுழைவாயிலை எட்டி பார்த்தேன்...
அந்த உருவம்,
வெளியே நின்று கொண்டிருந்தது..
அந்த உருவம்,
ஒரு பேய்..
எதற்கோ என்னை விரட்டுகிறது..
அச்சம் பயங்கரமாய்,
தாக்க,
திடுக்கிட்டு விழித்தேன்..
வியர்த்து கொட்டியது,
உடலெங்கும்..
கனவு கலைந்தது..
No comments:
Post a Comment