காத்திருப்பும்,, ரசனையும்,,
உன் மௌனமே,,
என்னுள் சிறந்த பாடலை,,
தெய்வீக இசையாய்,,
மெல்லிய சாரலாய்,,
அழகாக இசைக்கிறது...
உன் கவிதை பேசும்,
கண்களும்,,
காற்றில் அசைந்தாடும்,,
கேசமும் கூட,,
உன் மௌனத்தில்,,
மௌனமாக நிற்கின்றன,,
இமைக்க மறந்த உன்,,
விழிகளும்,,
அசைந்தாட மறந்த,,
காதோரம் தெறித்து விழும்,,
அழகிய கேசமும்,,
உன் மௌனத்தின்,,
அழகை அதிகபடுத்தி,,
என்னுள் பரவச உணர்வுகளை,,
பறக்க செய்கிறது...
உன் மௌனமே போதும்,,
உன் அழகை ரசிக்க...
மௌனம் கலைத்து,,
எனக்கான உன் பதிலை,,
சொல்ல வேண்டாம்,, இப்போதைக்கு..
ஒரு வேளை எதிர்மறையாய்,,
உன் பதில் இருக்குமானால்,,
நான் உடைந்தே போவேன்....
அதனால்,,
உன் மௌனம் கலைக்க வேண்டாம்..
உன் மௌனத்தை ரசித்து கொண்டே,,
காலம் முழுதும்,,
காத்திருந்து,,
வாழ்வை முடித்து கொள்கிறேன்...
***
காத்திருப்பும்,,
ரசனையும்,,
காதலுக்கு அழகு...
அழகிய காதல்,,, உணர்வோடு இணைந்த சுருதி... ***
No comments:
Post a Comment