என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 2 June 2013

துளிகள் ( சற்று காதல் சேர்த்து ) 1.

துளிகள் ( சற்று காதல் சேர்த்து ) .. 

உன்னை தொடர்கிறேன்,
பொய் கோபம் காட்டி, 
சட்டென்று நின்று, 
என்னை முறைக்கிறாய். 

பிறகு மீண்டும்,
நடக்கிறாய்,
எனக்கு தெரியாமல்,
மெல்லிய புன்னகை,
பூத்தபடி..

உன் கள்ளம் அறியாமலா,
நான் உன்னை,
தொடர்வேன், அடி கள்ளி..


*******


நீ அப்படிதான்..
உன்னை பற்றி,
உன்னை விட,
எனக்கு தெரியும்..

உன் மௌனத்தின்,
பின்னால் ஒளிந்திருக்கும்,
உணர்வுகளை,
உன்னை விட,
எனக்கு நன்றாய்,
தெரியும்..

ஏனெனில்,
உன் மீது பட்டு,
தெறிக்கும்,
என் சுவாச காற்றை,
மீண்டும் ஆழமாய்,
சுவாசிப்பவன் நான்..

அத்தனை பிரியம்,
உன் மீது..

No comments: